பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கயமை

293



பிச்சையெடுத்தல் என்னும் பாதுகாப்பு இல்லாத மரக்கலம், கொடாது ஒளித்து வைத்தல் என்னும் வலிய நிலத்தால் தாக்கப்பட்டால் உடைந்து விடும்.

ஏமாப்பு-பாதுகாப்பு; தோணி-மரக்கலம்; பார்-பாறை நிலம்; பக்கு விட்-பிளந்து விடுதல். 1068

9.இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.

இரத்தலை நினைத்தால் உள்ளம் கரைந்து உருகும். இரப்பவர்க்கு இல்லையென்று கூறி, ஒளிக்கும் கொடுமையை நினைத்தால் கரைந்து நின்ற அந்த உள்ளமும் இல்லாமல் அழிந்து ஒழியும்.

உள்ள-நினைக்க; இன்றிக் கெடும்-இல்லாமல் அழியும். 1069

10.கரப்பவர்க்கு யாங்கொளிக்குங் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.

'எமக்கு யாதும் இல்லை, சிறிது ஈயவேண்டும்’ என்று வறியவன் ஒருவன், பிறன் ஒருவனை நோக்கிக் கேட்கும் போதே அந்த வறியனுக்குத் தன் உயிரே போய் விடும் போன்று தோன்றுகினறது. அவ்விதம் அந்த வறிஞன் கேட்கும் நிலையைக் கண்டும், சிறிதும் இரங்காது தம்மிடமுள்ள பொருளை ஒளித்து வைத்துக் கொண்டு, தாமும் அவனைப் போல் 'என்னிடம் ஒன்றும் இல்லை' என்று கூறுவாரானால், அவர் உயிர் எங்குப் போய் ஒளிந்திருக்குமோ,தெரியவில்லை.

யாங்கு ஒளிக்கும்-எங்கே ஒளிந்திருக்கும்; கொல், ஓ-அவை ஐயப் பொருளைக் குறிக்க வந்தன; சொல்லாட்-சொல்லும் போதே; போம்-போகும். 1070

108. கயமை


1.மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாம்கண்டது இல்.

கயவர் என்பவர், வடிவத்தால் ழுழுவதும் மக்களையே ஒத்திருப்பர். அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை கூறத்தக்க வேறு ஒரு பொருளை யாம் கண்டதில்லை.