பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

294

திருக்குறள்


கயவர்-கீழ்மக்கள்; ஒப்பாரி-ஒப்புமை.

குறிப்பு: உறுப்பால் ஒத்திருந்தும் குணத்தால் ஒத்திராமையால் கயவர், மக்கள் என்று சொல்லத்தகாதவர் என்பது கருத்து. 1071

2.நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்.

நன்மையை ஆராய்ந்து அறிகின்ற அறிஞரைப் பார்க்கிலும் கீழ்மக்களே நன்மையுடையவராவர். ஏனென்றால், அந்தக் கீழ்மக்கள் எதைப் பற்றியும் தம் நெஞ்சில் கவலையில்லாதவர்கள் ஆதலால் என்க.

நன்று அறிதல்-நன்மையை ஆராய்ந்து அறிதல்; திருவுடையர்- தன்மையுடையவர், நல்வினையுடையவர்; திரு-செல்வம், நன்மை; அவலம்-கவலை.

குறிப்பு: கயவரைத் திருவுடையார் என்றது குறிப்பால் இகழ்ந்ததாகும். 1072

3.தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன செய்தொழுக லான்.

கயவரும் தேவரும் ஒரே தன்மையர் ஆவர். அஃது எவ்வாறெனில், கயவரும் தேவரைப் போன்றே தாம் விரும்புவனவற்றைத் தம் மனம் போனவாறு செய்து ஒழுகுவர் ஆதலால் என்க.

தேவர் - மேலுலகில் வாழ்வதாகக் கூறப்படும் ஒருவகைக் கடவுட் சாதியர்; மேவன-விரும்புவன; ஒழுகுதல்-நடத்தல்.. இது கயவரைப் புகழ்வது போலப் பழித்தலின் வஞ்சப் புகழ்ச்சியாம். 1073

4.அகப்பட்டி யாவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.

கீழ்மகன் தன்னினும் அடக்கம் இல்லாதவரைக் கண்டானாயின், அவரினும் தான் மேம்பாடுடையவனாக எண்ணி இறுமாந்து இருபபான்.

அகப்பட்டி-மன அடக்கம் இல்லாதவன், அறநெறியை மீறி நடப்பவன்; செம்மாக்கும்-இறுமாந்திருப்பான்; கீழ்-கீழ்மகன். 1074