பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒழுக்கமுடைமை

35


2.பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.

அறங்கள் பலவற்றையும் ஆராய்ந்து, அவற்றுள் இம்மையிலும், மறுமையிலும் துணையாக இருக்கக் கூடியது எது என்று போற்றித் தெரிந்தாலும், ஒழுக்கமே ஒருவர்க்குத் துணை என்பது தெரிய வரும். ஆதலால், அவ்வொழுக்கத்தையே போற்றிப் பாதுகாக்க வேண்டும். 132

3.ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.

ஒழுக்கம் உடைமையே ஒருவர் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர் என்பதை அறிவிக்கும். ஒழுக்கத்திலிருந்து தவறுதல் அவரைத் தாழ்ந்த குடிப் பிறப்பாக ஆக்கி விடும்.

குடிமை-குடிப்பிறப்பு; இங்கே உயர்ந்த குடிப்பிறப்பைத் தெரிவிக்கும். இழிந்த பிறப்பு-இழிவாகக் கருதத்தக்க குடும்ப நிலை. 133

4.மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.

பார்ப்பான், தான் கற்ற மறைப்பொருளை மறந்து போனாலும், அவன் மறுபடியும் அதைக் கற்றுக் கொள்ள முடியும். ஆனால், அந்தப் பார்ப்பான் நல்லொழுக்கத்திலிருந்து தவறி விடுவானே ஆனால், மீண்டும் அவன் நல்ல குடிப்பிறப்பு உடையவனாக எவராலும் கருதப்பட மாட்டான்.

ஓத்து-மறை அல்லது வேதம்; பிறப்பொழுக்கம்-நல்ல குடும்பத்தில் பிறந்ததனால் உண்டாகிய நல்ல ஒழுக்கம். 134

5.அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.

பொறாமை உடையவனிடத்தில் செல்வம் இல்லாமல் ஒழிந்து போவது போல், ஒழுக்கம் இல்லாதவனிடத்தில் உயர்வு இல்லாமல் போய் விடும். 135

6.ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.