பிறனில் விழையாமை
37
15. பிறனில் விழையாமை
1.பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.
பிறனுக்கு உரிமையாகிய மனைவியை விரும்பி வாழ்ந்து வரும் அறியாமைக் குணம் உலகத்தில் அறமும், பொருளும் ஆய்ந்து அறிந்தவரிடம் இல்லை.
பொருளாள்-பொருள் போல உரிமையானவள்; பெட்டு-விரும்பி; ஒழுகல்-நடத்தல்,வாழ்ந்து வருதல்; பேதைமை-அறியாமை; ஞாலம்-உலகம்; அறம் பொருள் கண்டார்-அறநூலையும், பொருள் நூலையும் ஆராய்ந்து அறிந்தவர். 141
2.அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையார் இல்.
பிறன் மனைவியை விரும்பி, அவனுடைய வாயிலிற் சென்று, தன் எண்ணம் நிறைவேறுதலுக்குத் தக்க சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அறிவில்லாத ஒருவன், தீய செயல் செய்பவர்களுள் எல்லாம் மிக இழிந்தவனாகக் கருதப்படுவான்.
அறன் கடை நின்றார்-அறநெறியில் கீழானவராகக் கருதப்படுவர்; பிறன்கடை-பிறன் ஒருவன் வீட்டின் வாயில் புறம். 142
3.விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார்.
சந்தேகம் சிறிதும் இல்லாமல் தம்மை நிச்சயமாக நம்பியவருடைய மனைவியின் மீது இச்சை கொண்டு, தீய செயல்களைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறு பட்டவரல்லர்.
விளித்தார்-செத்தார்; மன்ற-நிச்சயமாக; தெளிந்தார்-நம்பினவர்; இல்-மனைவி. 143
4.எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.
ஒருவர் தினை அளவேனும் தம் பிழையை எண்ணிப் பார்க்காமல், பிறனுடைய மனைவியினிடம் செல்லுவாரா