பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

திருக்குறள்


அடி உறைந்தற்று-அடியில் வந்து தங்கியிருத்தல் போன்றத. 208

9.தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.

ஒருவன் தன்னிடத்தில் அன்புடையவன் ஆயின், தீவினைப் பகுதியான செயல்களுள் ஒரு சிறிதும் பிறர்க்குச் செய்யாது ஒழிவானாக. 209

10.அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.

ஒருவன் தவறான வழியிற் சென்று, தீய செயலினைச் செய்யாதிருப்பானேயானால், அவன் சிறிதும் துன்பம் இல்லாதவன் என்று அறிக. 210

அருங்கேடன்-கேடு அற்றவன்; மருங்கு-பக்கம்.

22. ஒப்புரவறிதல்


1.கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.

நீரினைப் பொழிந்து உயிர்களைக் காப்பாற்றுகின்ற மேகக் கூட்டங்களுக்கு இவ்வுலகத்தில் உள்ள உயிர்கள் என்ன பிரதி உபகாரம் செய்கின்றன? ஒன்றும் இல்லை. ஆதலால், அம்மேகத்தைப் போன்றவர்கள் புரியும் உதவிகளும், பிரதி உபகாரங்களை எதிர்நோக்குவன அல்ல.

ஒப்புரவு-உலக நடையினை அறிந்து அதற்கேற்ற வண்ணம் செய்தல்; அஃதாவது ஒருவருக்கொருவர் பிரதி உதவியை எதிர்பாராமல் உதவி செய்து வாழ்தல்.

கைம்மாறு- ஒருவர் செய்த உதவிக்குப் பதில் உதவி; கடப்பாடு- ஒப்புரவு; மாரி-மேகம், மழை; ஆற்றும்-செய்யும். 211

2.தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.