இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
62
திருக்குறள்
9.வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.
புகழில்லாத உடம்பைச் சுமந்த நிலமானது குற்றமற்ற வளப்பத்தையுடைய விளைச்சல் இல்லாமல் குன்றி விடும். 239
10.வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.
தம்மைப் பிறர் இகழாமல் வாழக் கூடியவரே இவ்வுலகில் உயிரோடு வாழ்பவர் ஆவர். புகழைப் பெறாமல் உயிர் வாழ்கின்றவர்களை வாழாதவர் என்றே சொல்லுதல் வேண்டும். 240