72
திருக்குறள்
5.பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றெறு(ன்)
ஆசைகளையெல்லாம் அறவே ஒழித்து விட்டோம் என்று சொல்லிக் கொண்டு தகாத காரியங்களில் ஈடுபடுபவர்களுடைய பொய்யொழுக்கம், பின்னர் அவர்களே, "நாம் என்ன தவறு செய்து விட்டோம்" என்று எண்ணி எண்ணி வருந்தும்படியான துன்பங்களைத் தரும்.
பற்று-உலக ஆசை; எற்று எற்று என்று - என்ன தவறு செய்தோம், என்ன தவறு செய்தோம் என்று. 275
6.நெஞ்சில் துறவார் துறந்தாற்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.
உலக ஆசையினை உள்ளத்திலிருந்து ஒழிக்காதவராய், முற்றும் துறந்தவர் போல் நடித்து மக்களை ஏமாற்றி வாழ்கின்றவரைப் போன்ற கொடியவர் இவ்வுலகில் இலர். 276
7.புறம்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியார் உடைத்து.
வெளி வேடத்தில் செம்மை நிறம் வாய்ந்த குன்றிமணியைப் போல் செம்மையுடையோராகத் தோன்றினாராயினும், உள்ளத்தில் அந்தக் குன்றிமணியின் மூக்கில் உள்ள கருமைமைப் போன்ற கெட்ட எண்ணங் கொண்டவர்களை யும் உடையது இவ்வுலகம். 277
8.மனத்தது மாசாக மாண்டார் நீர்ஆடி
மறைந்தொழுகும் மாந்தர் பலர்.
மனத்தில் நிறைந்திருப்பது குற்றமாக இருக்க, மேலுக்குத் தவ ஒழுக்கத்திற் சிறந்தவர் போல் நடித்துப் புண்ணிய தீர்த்தங்களில் முழுகித் தம் வெளித் தோற்றத்தில் மறைந்து நின்று உயிர் வாழும் மக்கள் இவ்வுலகில் பலராவர். 278
9.கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.