பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கள்ளாமை

73


அம்பானது பார்ப்பதற்கு அழகாகத் தோன்றினாலும், கொடுமையான செயலைப் புரிகின்றது. யாழினது கொம்பு வளைந்து தோன்றினாலும், மக்களுக்கு இன்பத்தை தருவதில் சிறந்ததாக இருக்கிறது. அவ்விதமே மக்களுள்ளும் வேடங்களைப் பொருட்படுத்தாமல், அவர்களின் செயல்களைக் கண்டு அவர்கள் ஒழுக்கத்திற் சிறந்தவர்கள் அல்லது சிறவாதவர்கள் என்று தீர்மானித்தல் வேண்டும்.

யாழ்-வீணை போன்ற ஒரு வகை இசைக் கருவி; கோடு-கொம்பு; சென்னிது- சிறந்தது; வினைபடுபாலால்-செயல் வகையால் 279

10.மழித்தலும் நீட்டலும் வேண்டா, உலகம்

பழித்தது ஒழித்து விடின்.

பெரியோர்களால் வெறுக்கப்பட்ட தீய ஒழுக்கங்களை ஒருவன் முற்றிலும் நீக்கி விட்டால், தலைமயிரை அறவே நீக்கி மொட்டை அடித்துக் கொள்ளுதலும், சடையை நீட்டி வளர்த்துக் கொள்ளுதலும் ஆகிய வெளிவேடங்கள் அவருக்குச் சிறிதும் வேண்டியதில்லை. 280

29. கள்ளாமை


1.எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

பிறர் தன்னை இகழாதிருக்க விரும்புகின்றவன் பிறரை வஞ்சித்து எத்தகைய பொருளையும் கவர்ந்து கொள்ளாமல் இருக்கத் தன் மனத்தைக் காத்துக் கொள்ள வேண்டும்.

கள்ளாமை-பிறருடைய பொருளை அவர் அறியாத வண்ணம் அபகரித்துக் கொள்ளாமை. 281

2.உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்

கள்ளத்தால் கள்வேம் எனல்.

தகாத செயல்களை, மனத்தினாலே நினைப்பதும் குற்றமே ஆகும். ஆதலால், பிறருடைய பொருளைக் களவின் மூலம் அபகரித்துக் கொள்வோம் என்று நாம் மனத்தாலும் நினையாதிருத்தல் வேண்டும். 282


தி._6