பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாய்மை

75


கார் அறிவு-இருண்ட அறிவு, அறியாமை; ஆண்மை- ஆளும் தன்மை, வல்லமை. 287

8.அளவறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.

நீதி நெறிகளைஅறிந்து வாழ்கின்றவர் மனத்தில் அறச் செயல்கள் நீங்காமல் நிலை பெறும்.அது போலக் களவுச் செயலை அறிந்தவர் மனத்தில் வஞ்சனை நீங்காமல் நிலை பெறும். 288

9.அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.

களவுச் செயலைத் தவிரப் பிற நற்செயல்களைச் சிறிதும் அறிந்து தெளியாதவர், நியாயம் அல்லாதவற்றைச் செய்து அப்பொழுதே அழிந்து போவார். 289

10.கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை சுள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு.

திருட்டுத் தொழிலை மேற்கொண்டவர்களை உயிர் வாழ்வதற்கு இடமாகிய இவ்வுலகம் நீக்கி வைக்கும். திருட்டுத் தொழிலினை மேற்கொள்ளாதவர்களை வானுலகமும் விரும்பி வரவேற்கும்.

உயிர் நிலை-உயிர் வாழ்வதற்கு இடமாகிய இவ் வுலகம்; புத்தேளுலகு-தேவர்கள் வாழும் வானுலகம். 290

30. வாய்மை


1.வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

மெய் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிறது எதுவென்றால், மற்றவர்களுக்குத் தீங்கு ஒரு சிறிதும் தாராத சொற்களைச் சொல்லுவதே ஆகும்.

வாய்மை-மெய்ம்மை, உண்மை; தீமையில்லாத-தீங்கு விளைக்காத சொற்கள். 291