பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 38 of புல்லிய போகத்தைப் பொருள் கொடுப்பார்க் கெல்லாம் விரிக்கப் பட்ட பரபூரீகள் தோளை, அறிவொழுக்கங்களால் ஆன தம் புகழை உலகத்திலே பரப்ப வேண்டினவர்கள். தீண்டா ரென்ற வாறு. பரபூரீகளுக்கு ஆடல் பாடல் முதலானவை யழகென்பதாம். சு 917. நிறைநெஞ்ச மில்லவர் தோய்வர் பிறநெஞ்சிற் பேணிப் புணர்பவர் தோள் என்பது நெஞ்சிலே பிறிதொன்றை யாசைப்பட்டு அது காரணமாகக் கொடுப்பாரை யுடம்பாற் புணரும் பரபூரீகள் தோளை நிறைந்த மதியுடைய நெஞ்சமில்லாதவர்கள் சேர்வ ரென்றவாறு. பொருள் காரணம் அல்லாமல் புணர்ச்சிகாரணமில்லாதவர் கள் என்று அறிந்து, அறிவுடையார் சேரார்: அறிவில்லாதவர் சேர்வரென்றவாறு. GT 918. ஆயு மறிவின ரல்லார்க் கணங்கென்ப மாய மகளிர் முயக்கு என்பது வடிவு சொற் செயல்களால் வாஞ்சிக்க வல்லவர்களான பரபூ"கள் முயக்கம், அந்த வஞ்சனைகளை ஆராய்ந்தறிய மாட் டாதவர்களுக்குப் பெண்மை’யென்று சொல்லுவர்கள் நூலோ ரென்றவாறு. அறிவில்லாதவர்களுக்குப் பரபூரீகள், முன்பு நல்லவர்போலே யிருந்து, பின்பு பிராணனையும் கொள்ளுவர் என்பதாம். அ 919. வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப் H பூரியர்க ளாழு மளறு 1. பரப்பும் - அச்சுநூல் 2. இல்லாமல் என்பது காகிதச் சுவடி 3. உயிர்கொள்ளும் பெண்மைன்ன்றிருத்தல், தகும்: அணங்குதாக்கு - அச்சுநூல் \ .