ஜைன உரை
443
இப்பால் வெண்பா:
“அரசிய லையைந் தமைச்சிய லீரைந்
துருவல் லரணிரண்டொன் றொண்கூழ் - இருவியல்
திண்படை நட்புப் பதினேழ் குடிபதின் மூன்
றெண்பொரு ளேழா மிவை”
{குறிப்பு:- இது திருவள்ளுவ மாலைச் செய்யுள் எண் 26: போக்கியார் பாடியது: காலிங்கருரையிறுதியிலும் இச் செய்யுள் கொடுக்கப்பட்டுள்ளது).
இனி, காமத்துப்பால்
என்பது, இனி அந்தப் பொருளைத்துணைக் காரணமாகவுடைய இன்பங்கூறுகின்றார்.
இன்பமாவது ஐம்புலன்களும் ஒரு காலத்து ஒருபொருளை நுகர்கின்ற இன்பமாம். வட நூலுக்குள்ளே போசராசன், ‘சுவை பல வென்று சொன்னான்.’[1] நான் கூறுகின்றது இன்பச்சுவை யொன்றையுமே,[2] இது புணர்ச்சி பிரிவு என இருவகைப்படும். புணர்ச்சியைக் களவென்றும், பிரிவைக் கற்பென்றும் பிரசித்தியாக[3] உலக நடையோடு ஒப்பும் ஒவ்வாமையு மாகக் கூறுகின்றார்.
களவாவது, பிணி மூப்பிறப்பில்லாமல் எந்நாளும் ஒரு சரியாய் உருவும் திருவும் பருவமும் குலமும் குணமும் அன்பும் முதலான துகளினாலே[4] சரியொத்திருக்கிற தலைமகனும் தலைமகளும் பிறர் கொடுப்பவும் கொள்வதுமன்றித் தாங்களே ஒருவர்க்கொருவர் எதிர்ப்பட்டுப் புணர்ந்து வருவது.
இதனையேழதிகாரத்தாற் கூறுவான் றொடங்கி[5] முதலிலே தகையணங்குறுத்தல் *(கூறுகின்றார்.
109. தகையணங் குறுத்தல் குறிஞ்சி
அஃதாவது நாயகன் சிங்கார வனத்திலே விளையாடப் போனவிடத்திலே)* தனியே நின்றாளொரு நாயகியைக் கண்டு,