444
திருக்குறள்
விருப்பமாய்த் தானே வந்து பார்த்து,[1] அவளுடைய சவுந்தரியம் தன்னை வருத்துகிறதத்தை[2]ச் சொல்லுகிறது. இது கண்டவுடனே யுண்டானதாதலால் முதலிலே கூறுகின்றார்.
1081. அணங்குகொ லாய்மயில் கொல்லோ கணங்குழை[3]
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு
என்பது
தலைமகளுருபு முதலியன முன் கண்டறியாதனவாய் மிகவும் சிறப்பாயிருந்தது கண்டு தலைமகன் சந்தேகப்படுகிறது[4].
இந்த நீண்ட காதணியை யுடையவள் இந்தத் தோப்பிலே யிருக்கிற தேவதாஸ்திரீயோ[5] அல்லாமல் ஒரு மயிலோ அல்லாமல் ஒருமனுஷ ஸ்திரீயோ[6] இவளை இன்னாளென்று நிச்சயிக்கப் படாமல்[7] என்னெஞ்சு மயங்குகின்ற தென்றவாறு.
சித்திரத்தில்[8] எழுதப்படாத வடிவான படியினாலே தேவதாஸ்திரீயோ என்றும், நிறத்தினாலேயும்[9] சோலையிலே நிற்கிறத்தினாலேயும்[10] மயிலோ வென்றும், தன் மனது அவள் மேலே ஆசைப்பட்ட படியினாலேயும் அவள் தன்னைப் பார்த்தபடியினாலேயும் மனுஷஸ்திரீயோ வென்றும் சந்தேகப்பட்டதாம்.
1082. நோக்கினா னோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து*
என்பது
மனுஷஸ்திரீ யென்று நிச்சயம் பண்ணின தலைமகன் அவள் பார்வையினாலே தனக்கு வந்த வருத்தம் சொல்லுகிறது
இப்படிப்பட்ட அழகுடையவள் எனக்கெதிரே நின்று