ஜைன உரை
449
நான் பார்க்கிற போது தான் பாராமல் நாணியிருந்தும். நான் பாராத போது *(உற்று நோக்கியும் வருதலால் 'களவு கொள்ளும் என்றான். ௨
1093. நோக்கினா னோக்கி யிறைஞ்சினா ளஃதவள்
யாப்பினு ளட்டிய நீர்
என்பது
பார்வையினாலும் நாணினாலும் அறிந்தது. நான் பாராத போது) *தான் என்னை அன்போடு நோக்குவள்.
நான் பார்த்தால் *[1] மனதிலே யொன்றை நினைத்துக் கொண்டு நாணி நிற்பள்; அவள் பார்வை அன்பென்கிற பயிருக்கு வார்த்த தண்ணியாயிற்று[2] என்றவாறு.
அவள் பார்வையினாலே ஆசை அதிகமா மென்பது. ௩
1094. யானோக்குங் காலை நிலனோக்கும் நேக்காக்கால்
தானோக்கி மெல்ல நகும்
என்பது
நாணினாலும் மகிழ்ச்சி[3] யினாலும் அறிந்தது: நான் தன்னைப் பார்க்கிற போது தான் என்னெதிரே பாராமல் வணங்கி நிலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும், அதையறிந்து நான் பாராவிட்டால் தானென்னைப் பார்த்துத் தன்னுள்ளே மகிழ்ந்து சற்றே நகைப்ப ளென்றவாறு.
மகிழ்கிறது, புணர்தற் குறிப்பாமென்பது. ௪