465
திருக்குறள்
மாலைப் பொழுதிலே அனுபவிக்குந் துயரினையும், அதற்கு மருந்தான மடலினையும், முன்னே அறியேன்: இப்பொழுது எனக்கு மாலைபோலத் தொடர்ந்த சிறு வளையினை யுடையவள் தந்தாள் என்றவாறு.
காமம் எப்பொழுது முண்டானாலும் மாலைப் பொழுதிலே அதிகமாத லுடைமையின், மாலையுழக்குந் துயர் என்றார். ௫
1136. மடலூர்தல் யாமத்து முள்ளுவேன் மன்ற
படலொல்லா பேதைக்கென் கண்
என்பது, மடலுாரும் பொழுது, இன்றைக்கும் கழிந்தது என்றவளுக்குச் சொல்லியது:
உன்பேதை காரணமாக என் கண்கள் ஒரு பொழுதும் தூங்குகிறதில்லை; அதனால் எல்லாரும் தூங்குகிற நடு இரவிலும் நான் மடலூர்கிறதையே நினைய நின்றேன் என்றவாறு. ௬
1137. கடலன்ன காம முழந்து மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்
என்பது, பேதைக்கு என் கண் படலொல்லா என்பது பற்றி ‘அறிவில்லாரான ஸ்திரீகளிலும் அஃதுடைய புருஷர்களன்றே பொறுப்பவர்கள்’ என்றவளுக்குச் சொல்லியது:
சமுத்திரம் போலக் கரையில்லாத காம நோயினை அனுபவித்தும், மடலூராமற் பொறுத்திருக்கின்ற பெண் பிறப்புப் போல், மிக்க தகுதியையுடைய பிறப்பு உலகத்தில் இல்லை என்றவாறு.
பிறப்பு விசேடத்தால் அவ்வடக்கம் எனக்கில்லை; நீ அதனை அறிகின்றிலை என்பதாம்
இவ்வேழும் தலைமகன் சொன்னது; மேல் தலைமகள் கூற்று. ௭