470
திருக்குறள்
யான் காதலனைக் கண்ணாலே காணப் பெற்றது ஒரு நாளேயாயினும், அலராகிய வசை ஒருநாளல்லாமல், சந்திரனை இராகு மறைக்கிறது உலகமெங்கும் பிரகாசமானாற்போல் எங்கும் பரவிற்று என்றவாறு. ௬
1147. ஊரவர் கெளவை யெருவாக அன்னை சொல்
நீராக நீளுமிந் நோய்
என்பது
இந்தக் காம நோயாகிய பயிர், இந்தவூர் ஸ்திரீசனங்கள் சொல்லுகிற வசை வார்த்தை எருவாகவும், அந்த வசையைக் கேட்டுத் தாயானவள் கோபித்துக் கொண்டு சொல்லுகிற வார்த்தை தண்ணீராகவும் வளராநின்றது; இனி ஊரவர் சொல்லுகிறதும் தாய் சொல்லுகிறதும் பொறுக்க வேணும் என்றவாறு. ௭
1148. நெய்யா லெரிநுதுப்பே மென்றற்றாற் கெளவையாற்
காம நுதுப்பே மெனல்
என்பது
அயல் மனுஷர் சொல்லுகிற வசையினாலே நாம் காமத்தை அடக்குவோம் என்று நினைக்கிறது, நெய்யை வார்த்து நெருப்பை அவிக்க நினைக்கிறதற்குச் சரி என்றவாறு.
வசையாலே அதிகமாகிறதல்லாமல் அடங்காது என்பதாம். ௮
1149. அலர்நாண வொல்வதோ அஞ்சலோம் பென்னார்
பலர் நாண நீத்தக் கடை
என்பது
தன்னை எதிர்ப்பட்ட போது ‘உன்னை விட்டுப் பிரியேன் நீ பயப்பட வேண்டாம்’ என்றவர். எல்லாரும் நாணத் தக்கதாக நம்மைப் பிரிந்து போனார்: இனி நாம் பலராலே சொல்லப்பட்ட வகைக்கு அஞ்சக் கூடுமோ கூடாது என்றவாறு.