482
திருக்குறள்
சொன்னபடி செய்யாதவர்களாலே ஒரு பிரயோசனமுமில்லை என்பதாம். ௮
1179. வாராக்கால் துஞ்சா வரிற்றுஞ்சா வாயிடை
ஆரஞ ருற்றன கண்
என்பது “நீயுமாற்றி நின் கண்களும் துயில்வன வாதல்வேண்டும்” என்ற தோழிக்குச் சொல்லியது:
காதலர் வாராத நாளிலே வரவு பார்த்துத் துாங்காது, வந்த நாளிலே அவர் பிரிந்து போகப்போகிறார் என்கிற பயத்தினாலே தூங்கா; ஆனபடியினாலே இரண்டு வகையாலேயும் என் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தையுடையன என்றவாறு.
என் கண்களுக்கு எந்நாளும் நித்திரையில்லை யென்பதாம். ௯
1180. மறைபெற லூரார்க் கரிதன்றா லெம்போல்
அறை பறை கண்ணா ரகத்து
என்பது, “காதலரை இந்த வூரார் பழியாமல் அவர் கொடு மையை மறைக்க வேண்டும்” என்ற தோழிக்குச் சொல்லியது: யான் காதலர் கொடுமையை மறைத்துக் கொண்டிருக்கவும் என் கண்கள் வாடிப் புலர்ந்திருக்கிறதினால், இந்தவூரார்க்கு நான் மறைக்கிறதை அறிகிறது மெத்த எளிது என்றவாறு.
உள்ளே யிருக்கிறதைப் புறத்தியாருக்கு அறியப் பண்ணுகிறதினாலே அறை பறை கண் என்றார் ௰
பாலை நிலம் முற்றும்
ஆக அதிகாரம் ளகஅ க்குக்குறள் சநகஅ௰
இப்பால் 119. பசப்புறு பருவரல்[1]
என்பது, நாயகன் பிரிந்து போனதைப் பொறுக்க மாட்டாமையினாலே உடம்பு வேறுநிறமாய் வெளுத்துப் பசலை பூக்கிறதாம்.
- ↑ பசப்பு - பிரிவாற்றாமையான் வருவதோர் நிறவேறுபாடு. பருவரல் துன்பம்