ஜைன உரை
497
1225. காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை
என்பது
காலையும் மாலையும் அவர் கூடின நாளைப்போல் வாராமல், இப்போது வேறாய் வாரா நின்றன: யான் காலைக்குச் செய்த உபகாரம் என்ன? மாலைக்குச் செய்த பகையென்ன என்றவாறு.
காலைப்பொழுது விரகவேதனை செய்யாதிருக்க, மாலைப் பொழுது வருத்தஞ் செய்கிறபடியினாலே பகையா மென்பதாம் ௫
1226. மாலைநோய் செய்தல் மணந்தா ரகலாத
காலை யறிந்த திலேன்
என்பது
முன்பெல்லாம் நட்பாய் எனக்கு இன்பஞ் செய்து வந்த மாலைப் பொழுது, இப்போது பகையாய்த் துன்பஞ் செய்கிறதை, நாயகன் பிரிதற்கு முன்னே யறியேன் என்றவாறு.
அறிந்தால், காதலரைப் பிரிந்து போகவொட்டேன் என்பதாம். ௬
1227. காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்
என்பது
இந்தக் காமநோயாகிய பூ, காலைப் பொழுதிலே அரும்பிப் பகலெல்லாம் பெரிய அரும்பாகி முதிர்ந்து, மாலைப்பொழுதிலே மலரா நிற்கும் என்றவாறு. ௭
1228. அழல்போலும் மாலைக்குத் தூதாகி யாயன்
குழல்போலுங் கொல்லும் படை
என்பது
முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல், இது பொழுது, நெருப்புப் போலச் சுடுவதாய மாலைப்பொழுதின்