525
திருக்குறள்
னுங்கருத்தினால், உன்னை நினைத்தேனென்று சொன்னேன். அதுகேட்டு, ஒருகால் மறந்து ஒருகால் நினைத்திரோ வென்று சொல்லிப் பிணங்கினாள் என்றவாறு. ௬
1317. வழுத்தினான் தும்மினே னாக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீ ரென்று
என்பது இதுவுமது
கூடியிருக்கையிலே நான் தும்மினேன் என்று கண்டு வாழ்த்தினாள்; அப்படி வாழ்த்தினவள் திரும்பி, ‘உம்மை யார் நினைத்தார்களோ அதனாலே தும்மினீர்’ என்று கூறிப் புலந்து அழுதாள் என்றவாறு. ௭
1318. தும்முச் செறுப்ப வழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ வென்று
என்பது இதுவுமது
எனக்குத் தும்மல் வந்தது; அது கண்டு யார் நினைத்தாரென்று பிணங்கப் போகிறாளென்று, அந்தத் தும்மலைஅடக்கினேன்; அப்படி அடக்கியும் ‘உம்மை நினைத்தவளை மறைக்க வேண்டித் தும்மலை அடக்கினீர்’ என்று பிணங்கி அழுதாள் என்றவாறு. ௮
1319. தன்னை யுணர்த்தினுங் காயும் பிறர்க்குநீ
ரிந்நீர ராகுதி ரென்று
என்பது இதுவுமது.
இப்படிப் பிணங்கின தன்னை வணங்கிக் கொண்டாடுகிற போதும் கோபிப்பள், மற்ற ஸ்திரீகள் பிணங்கின போது இப்படி வணங்கிக் கொண்டாடுவீர் என்று சொல்லி என்றவாறு. ௯
1320. நினைத்திருந்து நோக்கினுங் காயு மனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீ ரென்று
என்பது இதுவுமது