529
ஜைன உரை
இருக்கிறது இன்பமாம் என்றவாறு. ௬
1327. ஊடலிற் றோற்றவர் வென்றா ரதுமன்னும்
கூடலிற் காணப் படும்.
என்பது இதுவுமது.
காமம் அனுபவிக்கும் இருவருள் பிணங்குகிறதில் தோற்றவர் வென்றவராம்; அது அப்போது அறியப்படாதாயினும், புணருகிற போது அவர்களால் அறியப்படும் என்றவாறு. ௭
1328. ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலிற் றோன்றிய வுப்பு
என்பது இதுவுமது.
இப்பொழுது இவள் முகம் வெயர்க்கக் கூடிய கலவியின் கண் உண்டாய இன்பத்தைப் பிறகு அவள் பிணங்கி யாம் பெற வல்லேமோ என்றவாறு. ௮
1329.ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா
என்பது இதுவுமது.
நல்ல இழையினை யுடையவள் என்னோடு இன்னும் பிணங்க வேணும்; அந்தப் பிணக்கைத் தீர்க்கிறதற்கு இந்த இராத்திரியானது வெகுகாலம் நீட்டிக்கவேண்டும் என்றவாறு.
அவள் பிணங்குகிறதற்கும் யான் வணங்கிப் பிணக்குத் தீர்த்தற்கும் பொழுது விடியாமல் இருக்கவேணு மென்பதாம். ௯
1330. ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்
என்பது இதுவுமது.
காமம் அனுபவிக்கிறதற்கு இன்பமாவது, அதற்குரியவர் ஆராமையாலே பிணங்கி யிருக்கிறதாம் அளவறிந்து பிணக்கு நீங்கித் தம்முட்கூடி முயங்குதல் கூடுமாயின் அம்முயக்கம் அப்