பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 42. கேள்வி

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை, 411

செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும். 412

செவியுணவிற் கேள்வி உடையார் அவியுணவின் ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து. 413

கற்றிலன் ஆயினும் கேட்க அஃது.ஒருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை. 414

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல் 4|S

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும். 416

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத் ஈண்டிய கேள்வி யவர். (துணர்ந்து 417

கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி, 418

துணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயின ராதல் அரிது. 419

செவியிற் சுவையுனரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என். 420