பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 49. காலமறிதல்

பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது, 481

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை யார்க்கும் கயிறு. 482

அருவினை என்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின், 483

ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின், 484

காலம் கருதி இருப்பர் கலங்காது

ஞாலம் கருது பவர். 485

ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து. 486

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். 487

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை காணின் கிழக்காம் தலை, 488

எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற்கு அரிய செயல். 489

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து. 490

5. திரு-எண்டு