பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 53. சுற்றந் தழால்

பற்றற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல் கற்றத்தார் கண்ணே யுள. $2?

விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா ஆக்கம் பலவும் தரும். 522

அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று. 523

சுற்றத்தாற் சுற்றப்பட ஒழுகல் செல்வந்தான் பெற்றத்தாற் பெற்ற பயன். 524

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தான் சுற்றப் படும். $25

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின் மருங்குடையார் மாநிலத் தில் S26

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீரார்க்கே யுள. 527

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர். 528

தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் காரணம் இன்றி வரும். 529

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்திருந்து எண்ணிக் கொளல். 530