பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 55. செங்கோன்மை

ஒர்ந்துகண் ணோடா திறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை. S4]

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோனோக்கி வாழுங் குடி $42

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல். 543

குடிதழிஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழிஇ நிற்கும் உலகு. 544

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு 545

வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலது உம் கோடா தெனின். 546

இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின். 547

எண்பதத்தான் ஒரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும். $48

குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில். $49

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர். $50