பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 70. மன்னரைச் சேர்ந்தொழுகல்

அகலா தணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். 69?

மன்னர் விழைய விழையாமை மன்னரான் மன்னிய ஆக்கம் தரும். 692

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது. 693

செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் ஆன்ற பெரியா ரகத்து. 694

எப்பொருளும் ஒரார் தொடரார்மற் றப்பொருளை விட்டக்கால் கேட்க மறை. 695

குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல். 696

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல், 697

இனையர் இனமுறையர் என்றிகழார் நின்ற ஒளியோ டொழுகப் படும். 698

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர். 699

பழைய மெனக்கருதிப் பண்பல்ல செய்யும்

கெழுதகைமை கேடு தரும். 700