பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 63 78. படைச் செருக்கு

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னை முன்நின்று கல்நின்றவர். 771

கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது. 772

பேராண்மை என்பதறுகண்ஒன்றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு. 773

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். 774

விழித்தகண் வேல்கொண்டு எறிய அழித்திமைப்பின் ஒட்டன்றோ வன்கணவர்க்கு. 775

விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள் வைக்குந்தன் நாளை எடுத்து. 776

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து. 777

உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினுஞ்சீர் குன்றல் இலர். 778

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர். 779

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து. 780