பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 83. கூடா நட்பு

சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு. 821

இனம் போன்று இனமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும். 822

பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது. 823

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா வஞ்சரை அஞ்சப் படும். 824

மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற் றன்று. 825

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும். 826

'சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான். 827

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணிரும் அனைத்து. 828

மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து நட்பினுள் சாப்புல்லற் பாற்று. 829

பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு அகநட்பு ஒரீஇ விடல் 830