பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185 89. உட்பகை

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும இன்னாவாம் இன்னா செயின், 88?

வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு. 882

உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும். 883

மனமாணா உட்பகை தோன்றின் இனமானா ஏதம் பலவும் தரும். 884

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் ஏதம் பலவும் தரும். 885

ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது. 886

செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி 887

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது உட்பகை யுற்ற குடி 888

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாம் கேடு. 889

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந் தற்று. 890