பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195 94. சூது

வேண்டற்க வென்றிடினும் குதினை வென்றது.உந் தூண்டிற்பொன் மீன் விழுங்கி யற்று. 931

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் நன்றெய்தி வாழ்வதோர் ஆறு. 932

உருளாயம் ஒவாது கூறிற் பொருளாயம் போஒய்ப் புறமே படும். 933

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின் வறுமை தருவதொன்று இல், 934

கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார். 935

அகடாரார் அல்லல் உழப்பர் குதென்னும் முகடியான் மூடப்பட் டார். 936

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின். 937

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளிஇ அருள் அல்லல் உழப்பிக்கும் சூது. (கெடுத்து 938

உடைசெல்வம் ஊண்ஒளி கல்வியென்று ஐந்தும் அடையாவாம் ஆயங் கொளின் 939

இழத்தொறுஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறுஉம் காதற்று உயிர் 940