இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
231 11. புணர்ச்சி மகிழ்தல்
கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே யுள. 110]
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து, 1102
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு. 1103
நீங்கின் தெறுஉங் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள், 1104
வேட்ட பொழுதின் அவையவை போலுமே தோட்டார் கதுப்பினாள் தோள். 1105
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள். 1106
தம்மில் இருந்து தமதுபாத்து உண்ட ற்றால் அம்மா அரிவை முயக்கு. 1107
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு. 1108
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன். 1109
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு. 1110