இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
239 15. அலர் அறிவுறுத்தல்
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால், 174}
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது அலரெமக்கு ஈந்ததிவ் ஆர். 1142
உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து. 1743
கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல் தவ்வென்னும் தன்மை இழந்து. || 44
களித்தோறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படும் தோறும் இனிது. 1145
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று. 1746
ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய். fj47
நெய்யால் எரிதுதுப்பேம் என்றற்றால் கெளவையால் காமம் நுதுப்பேம் எனல் 1748
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார் பலர்நாண நீத்தக் கடை 1149
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் கெளவை யெடுக்கும் இவ்வூர். 1150