பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால் - கற்பியல் 242

பிரிவுத்துன்பமான இந்த நோயை, பிறர் அறியாதபடி மறைப்பேன்; ஆனால், அஃது ஊற்று நீரைப்போல மேன்மேலும் சுரந்து சுரந்து பெருகுகின்றதே. 116# காமநோயை முழுவதும் முடி மறைக்கவும் முடியவில்லை; நோயைச் செய்த காதலருக்குத் தூது அனுப்புவதும் என் பெண்மைக்கு நாணம் தருகின்றதே! fió2 பிரிவுத் துயராலே நலியும் என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு, காமமும் நாணமும் இருபாலும் சம எடையாகத் துங்குகின்றனவே! 1163 காமமாகிய நோயும் கடலைப் போலப் பெருகியுள்ளது. அதைக் கடக்கும் தோணியாகிய காதலர்தாம் இப்போது நம்மோடு உடனில்லாமற் போயினர்! lf64 இனிமையான நட்புடைய நம்மிடமே துன்பத்தைச் செய்யும் நம் காதலர், பகையை வெல்வதற்கான வலிமை வேண்டும்போது, என்னதான் செய்வாரோ? 1165 காம இன்பமானது அதுபவிக்கும்போது கடலளவு பெரிதாயுள்ளது; ஆனால், பிரிவுத் துன்பத்தால் வருத்தும்போது, அவ்வருத்தம் கடலைவிடப் பெரிதாக உள்ளதே! #166 காமமாகிய கடும்புனலை நீந்திநீந்திக் கரை காணாமல் தவிக்கின்றேன். இந்த நள்ளிரவிலும், யான் ஒருத்தியே தூங்காமல் வருந்தியபடி உள்ளேன்! fí67 இந்த இராக்காலமும், எல்லா உயிர்களையும் உறங்கச் செய்துவிட்டு, என்னையன்றி யாரையும் இந்நள்ளிரவில் தனக்குத் துணையில்லாமல் உள்ளதே! 1768 பிரிவுத் துயராலே வருந்தும்போது மிக நீண்டதுபோலக் கழிகின்ற இரவுப்பொழுதானது, நம்மைப் பிரிந்துபோன காதலரினும் மிகமிகக் கொடுமையானது. 1169 என் உள்ளத்தைப் போலவே, உடலும், அவர் இருக்கும் இடத்திற்கு இப்போதே செல்ல முடிந்ததானால், என் கண்கள் இப்படிக் கண்ணிர் வெள்ளத்தில் நீந்தாவே! 1170