பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

263 127. அவர்வயின் விதும்பல்

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல். 1261

இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல் கலங்கழியும் காரிகை நீத்து. 1262

உரன்நசைஇ, உள்ளம் துணையாகச் சென்றார் வரல்நசைஇ இன்னும் உளேன். 1263

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் கோடுகோ டேறும்என் நெஞ்சு. 1264

காண்கமற் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் நீங்குமென் மென்றோள் பசப்பு. 1265

வருகமற் கொண்கன் ஒருநாள் பருகுவன்

பைதல்நோய் எல்லாம் கெட 1266

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன் கண்ணன்ன கேளிர் வரின். (கொல் 1267

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து மாலை அயர்கம் விருந்து. 1268

ஒருநாள் எழுநாள்போல் செல்லும் சேட்சென்றார் வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு. 1269

பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம் உள்ளம் உடைந்துக்கக் கால். 1270