பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால் - கற்பியல் 268

நெஞ்சமே! அவர் நெஞ்சமானது நம்மை மறந்து அவர் விருப்பத்தையே மேற்கொள்வதைக் கண்டபின்னரும், நீதான் எமக்குத் துணையாகாததுதான் எதனாலோ? 1291 என் நெஞ்சமே! நம்மேல் அன்புகொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று நினைந்து அவரிடமே செல்கின்றாயே! அதுதான் எதனாலோ? 1292 நெஞ்சமே! நீ நின் விருப்பத்தின்படியே அவர் பின்னாகச் செல்லுதல், துன்பத்தாலே கெட்டுப்போனவருக்கு நண்பராக யாருமே இல்லை என்பதனாலோ? 1293 நெஞ்சமே! நீதான் ஊடுதலைச் செய்து அதன் பயனையும் நுகரமாட்டாய் இனிமேல் அத்தகைய செய்திகளைப்பற்றி நின்னோடு ஆராய்பவர்தாம் எவரோ? 1294 அவரைப் பெறாத போதும் அஞ்சும் பெற்ற போதும் பிரிவாரோ என்று அஞ்சும் இவ்வாறு என் நெஞ்சம் நீங்காத துயரையே உடையதாகின்றது. 1295 அவரைப் பிரிந்த நாளில், தனியே இருந்து நினைத்தபோது, என் நெஞ்சம் எனக்குத் துணையாகாமல், என்னைத் தின்பதுபோலத் துன்பம் தருவதாக இருந்தது! 1296 காதலரை மறக்கவியலாத, என்னுடைய சிறப்பில்லாத மடநெஞ்சத்தோடு சேர்ந்து, மறக்கக் கூடாததாகிய நாணத்தையும் நான் மறந்தேனே! 1297 பிரிந்த கொடுமையாளரை இகழ்ந்தால் இழிவாகும் என்று நினைத்து, அவர்மேல் உயிர்போலக் காதல்கொண்ட என் நெஞ்சம், அவரது உயர்பண்புகளையே நினைக்கிறதே! 1298 தாம் உரியதாக அடைந்திருக்கும் தம் நெஞ்சமே தமக்குத் துணையாகாத பொழுது, ஒருவருக்குத் துன்பம் வந்த காலத்தில், வேறு எவர்தாம் துணையாவார்கள். 1299 தாம் சொந்தமாக உடைய நெஞ்சமே தமக்கு உறவாகாதபோது, அயலார் உறவில்லாதவராக அன்பற்று இருப்பது என்பதும் இயல்பானதே ஆகும். 1300