பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 10. இனியவை கூறல்

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். 91

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். 92

முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம். 93

துன்புறுஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறுஉம் இன்சொ லவர்க்கு 94

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற. 95

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின் 96

நயன்ஈன்று நன்றிபயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல். 97

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும். 98

இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன் வன்சொல் வழங்கு வது. (கொலோ 99

இனிய உளவாக இன்னாத கூறல் கணியிருப்பக் காய்கவர்ந் தற்று. 100