பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 12. நடுவு நிலைமை

தகுதி எனவொன்று நன்றே பகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின். 11]

செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து. 112

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல். 113

தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும். 114

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி, jįS

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின், 116

கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. 117

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொரு கோடாமை சான்றோர்க்கு அணி. (பால் 18

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின். ||9

வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவுந் தமபோற் செயின், 120