இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
41 18. வெஃகாமை
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும். 17]
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர். 172
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர். 173
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர். 174
அல்கி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின், 175
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும். 176
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் மாண்டற்கு அரிதாம் பயன். 177
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள். 178
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறனறிந்து ஆங்கே திரு. 179
இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமை என்னும் செருக்கு 180
3. திரு-எண்6