பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 20. பயனில சொல்லாமை

பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லோரும் எள்ளப் படும். 191

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கண் செய்தலின் தீது, 192

நயனிலன் என்பது சொல்லும் பயனில பாரித்து உரைக்கும் உரை. 193

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லார் அகத்து. 194

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில

நீர்மை உடையார் சொலின். 195

பயனில்சொல் பாராட்டு வானை மகன் எனல் மக்கட் பதடி எனல் 196

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று. 197

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல். 198

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள் மாசறு காட்சி யவர். (தீர்ந்த 199

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல். 200