இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
49 22-ஒப்புரவு அறிதல்
கைம்மாறு வேண்டா கட்டுப்பாடு மாரிமாட்டு என்ஆற்றும் கொல்லோ உலகு. 21]
தாளாற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு, 212
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற 213
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும். 214
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு. 215
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின், 216
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின், 217
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கட னறி காட்சி யவர். 218
நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர செய்யாது அமைகலா ஆறு. 219
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து. 220