பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 29. கள்ளாமை

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு, 281

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தாற் கள்வேம் எனல் 282

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும். 283

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும். 284

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல், 285

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காத லவர். 286

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல், 287

அளவறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும் களவறிந்தார் நெஞ்சில் கரவு, 288

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றாதவர். 289

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தேள் உலகு. 290