பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 30. வாய்மை

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல். 291

பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். 292

தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும். 293

உள்ளத்தாற் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன். 294

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை, 295

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமும் தரும். 296

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று. 297

புறந்துாய்மை நீரான் அமையும் அகந்துய்மை வாய்மையால் காணப் படும். 298

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு, 299

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத் வாய்மையின் நல்ல பிற. (தொன்றும் 300