பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 33. கொல்லாமை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும். 321

பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. 322

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று. 323

தல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி. 324

நிலையஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலையஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை, 325

கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேற் செல்லாது உயிருண்ணும் கூற்று. 326

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை. 327

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கம் கடை 328

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவார் அகத்து. 329

உயிருடம்பின் நீக்கியார் என்ப செயிருடம்பிற் செல்லாத்தி வாழ்க்கை யவர். 330