இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
79 37. அவா அறுத்தல்
அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும் தவா,அப் பிறப்பினும் வித்து. 36]
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும். 362
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை யாண்டும் அஃதொப்பது இல், 363
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும். 364
அற்றவர் என்பார் அவாவற்றார் மற்றையார் அற்றாக அற்றது இலர். 365
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை வஞ்சிப்ப தோரும் அவா. 366
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான்வேண்டும் ஆற்றான் வரும். 367
அவாவில்லார்க் கில்லாகும் துன்பம் அஃ துண்டேல் தவாஅது மேன்மேல் வரும். 368
இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பம் கெடின், 369
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும். 370