பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 38. ஊழ்

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி 371

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் ஆகலூழ் உற்றக் கடை 372

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும். 373

இருவே றுலகத் தியற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு. 374

நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு. 375

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியுனும் போகா தம. 376

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அறிது. 377

துறப்பார்மன் துப்புரவு இல்லார் உறற்பால ஊட்டா கழியும் எனின். 378

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன். 379

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான்முந் துறும். 380