இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
89 41. கல்லாமை
அரங்குஇன்றி வட்டாடி அற்றே நிரம்பிய நூல்இன்றிக் கோட்டி கொளல். 401
கல்லாதான் சொற்கா முறுதல் முலைஇரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று. 402
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லா திருக்கப் பெறின். 403
கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும் கொள்ளார் அறிவுடை யார். 404
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும். 405
உளர்.என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் களர்அனையர் கல்லா தவர். 406
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை அற்று. 407
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு. 408
மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்துஇலர் பாடு. 409
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனையவர். 410