பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
புரட்சிக் கவிஞர் - பாவேந்தர்

பாரதிதாசன்

பாடுகிறார் :


திராவிட நாட்டுளீர் உங்கள் செயற்கெலாம்"
அறமே அடிப்படை ஆதல் வேண்டும்
அறம் எனல் வள்ளுவர் அருளிய திருக்குறள்
செல்லும் வழிக்குத் திருக்குறள் விளக்கு!
மணமா சறுக்கும் இனிய மருந்து
கசடறக் கற்க ! கற்றிலார் அறிஞர்பால்
கேட்க! கேட்க! திராவிடம் மீட்க
ஒளவையார் அருளிய ஆத்திச் சூடியில்
ஒரு தொடர் தன்னை - ஒன்றுக்கான
உரையை எப்படி, ஒருவர் இலேசாய் .
நினைவில் நிறுத்தி இனி துரைப்பாரோ
அப்படித் திருக்குறள் முனிசாமி அறிஞர்
முப்பால் ஆயிரத்து முன்னூற்று முப்பது
குற ளையும் அவற்றிற்குக் கொடுத்த பொருளையும்
நினைவில் நிறுத்தி இனிது விளக்கும் ஓர்
ஆற்றல் உடையவர்; அவர் திருக்குறள் மலர்
வழங்கும் நகைச்சுவை மறச்சுவை பிறசுவை
 ஆர்ந் தசொல் அனைத்தும் பெரும்பயன் அளிப்பவை.
அரிசிமா இட்டடவி அளிப்பதாய்ச் சொல்லிப்
பாசிப்பயற்றும் படைப்பார் அல்லர்;'
அறிஞரின் பேச்சும் எழுத்தும் அருங்குறள் |
தேன் ஆற் றி னின்று செம்பில்மொண் டளிப்பவை -
குறட்பயன் கொள்ள நம் திருக்
குறள்முனி சாமிசொல் கொள்வது போதுமே!'.