பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகராதி அறிஞர் டாக்டர் ந. கைலாசம் அவர்களின் அணிந்துரை அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலாக உலகத் திருமறை திருக்குறள் அமுதத்தை அள்ளித் தந்தவர் ஐயா திருக்குறளார் அவர்கள். தமிழக முழுவதிலும் அல்லாமல் பாரத தலைநகராம் புதுதில்லிலேயும் ஐயா பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஐந்து ஆண்டு காலமும் திருக்குறள் நெறியைத். தமிழிலும் ஆங்கிலத்திலும் சுவைபட பலமொழிகள் பேசும் மக்களிடையே எடுத்துக் கூறினார்கள். - திருக்குறள் கேசரி' என்ற பட்டத்தினை அப்போது ஐயா அவர்களுக்கு வழங்கி மக்கள் பெருமகிழ்ச்சி’ கொண்டனர். . -