பக்கம்:திருக்குறள் உரை.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் 898. குன்றுஅன்னார் குன்ற மதிப்பின் குடியொடு நின்றன்னார் மாய்வர் நிலத்து. குன்றனைய வலியார் மதிப்புக் குறைய நடப்பின் குடியொடு கூடி வாழ்ந்தவரும் கெடுவர் இந்த நிலத்தில். 898. 899, ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும். காத்தற்கரிய, கொள்கையும் வலிமையுமுடையவர் கோபிப்பாராயின் அரசர்களும் பதவி இழப்பர். "வேந்துகெடும்” என்பதற்கு, தேவேந்திரன் என்று பொருள் கூறுதல் பொருந்தாது. 899. 900, இறந்துஅமைந்த சார்புடையார் ஆயினும் உய்யார் சிறந்துஅமைந்த சீரார் செறின். மிகப் பெரிய சார்புகளைப் பெற்றிருப்பினும் சிறந்த வலிமையுடையோர் சினப்பின் உய்தல் அரிது. 900, 91. பெண் வழிச் சேறல் ஒரு தலைமகன் காமத்தின் காரணமாக மட்டும் எடுத்துக் கொண்ட துறையில் தன் மனைவியின் பேச்சைக் கேட்டு நடத்தல் தீமையைத் தரும் என்றவாறு. இந்த அதிகாரம் பெண்ணடிமைத் தனத்தை உறுதிப்படுத்துமா எனின் இல்லை. தாம் எடுத்துக் கூறப்போகும் செய்திகளில் மனைவிக்கு அறிவும் தெளிவும் இருந்து தற்சார்பு இல்லாது கூறின் ஆண் ஆய்வுக்கு எடுத்துக் கூறப்போகும் செய்திகளில் மனைவிக்கு அறிவும் தெளிவும் இருந்து தற்சார்பு இல்லாது கூறின் ஆண் ஆய்வுக்கு எடுத்து கொள்ள கடைமை என்பதறிக. 901. மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார் வேண்டாப் பொருளும் அது. புலனுகர்ச்சி வழிப்பட்ட காமம் காரணமாக மனைவி சொல்வதைக் கேட்போன் மாட்சிமைக்குரிய பயனை அடையமாட்டான். சிறந்த முயற்சிகளை விரும்புவாருக்கு, பெண்வழிச்செல்லுதலாகிய மனையறம் வேண்டற்பாற்றன்று. ‘'வேண்டாப் பொருள்' - வாழ்க்கைக்கு மாண்பினைச் சேர்க்காத மனைவி, வேண்டாத பொருள் என்று உணர்த்தியது. 901. 902. பேணாது பெண்விழைவாண் ஆக்கம் பெரியதோர் நானாக நானுத் தரும். 264 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை