பக்கம்:திருக்குறள் உரை.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்டால் உறுப்புகளால் ஒத்து இருப்பதால் மக்களுடன் ஒப்பாதல் இல்லை. உறுப்புகள் அமைவு மட்டும் பெற்று விளங்குவது வெறுக்கத்தக்கது. பண்பாட்டில் ஒத்திருத்தலே மக்களொடு ஒப்புடையது. மானுட உறுப்புக்கள் பெற்றும் மானுடப்பண்பு பெறாதொழியின் மானுடர் அல்லர் என்பது கருத்து. 993. 994. நயனொடு நன்றி புரிந்த பயன்உடையார் பண்புபா ராட்டும் உலகு. நீதியையும், நண்மையையும் விரும்பிச் செய்யுமாற்றால் பயனுடையராக வாழ்பவரின் பண்பை உலகு பாராட்டும். நீதிச் சார்புடையார் செய்வதே நன்மை. அந்நன்மையே பயனுடையது என்ற உண்மை உணர்த்தியவாறு. 994, 995. நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும் பண்புஉள பாடறிவார் மாட்டு. நகைத்து மகிழ்வுடன் இருக்கும்போழ்தும் ஒருவரை இகழ்தல் தீது, பகைமையுடையாரிடத்தும் உள்ள பண்புகளையே காட்டல் வேண்டும். இன்னாதன கூடா. மகிழ்ந்து வாழும் காலத்திலும் சரி. பகைமை வந்த போதும் சரி. இன்னாதன செய்யாமையே பண்பாடு. 995. 996, பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அது இன்றேல் மண்புக்கு மாய்வது மன். பண்புடையார்கள் இடத்தில் உலகியல்பும் உலக இயக்கமும் உண்டு. பண்புடையாரிடத்தில் உலகியல்பு இல்லையாயின் இந்த உலகம் மண்ணுக்குள் புகுந்து அழிவதாகும். உலகியல்பாவது ஒப்புரவும் நட்புமாம். இவையிரண்டும் உலகை இயக்குவன. உலகை நடத்துவன. 996. 286 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை