பக்கம்:திருக்குறள் உரை.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 119. பசப்பு உறு பருவல் 1181. நயந்தவர்க்கு நல்காமை தேர்ந்தேன் பசந்தஎன் பண்பியார்க்கு உரைக்கோ பிற? 1182. அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்துஎண் மேனிமேல் ஊறும் பசப்பு. 1183 சாயலும் நாணலும் அவர்கொண்டார் கைம்மாறா நோயும் பசலையும் தந்து. 1184. உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால் கள்ளம் பிறவோ பசப்பு. 1185. உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என் மேனி பசப்பு:ஊர் வது. 1186. விளக்குஅற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன் முயக்குஅற்றம் பார்க்கும் பசப்பு. 1187. புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன்; அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு. 1188. பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத் துறந்தார் அவர்என்பார் இல். 1189. பசக்கமன் பட்டாங்குஎன் மேனி நயப்பித்தார் நல்நிலையர் ஆவர் எனின். 1190. பசப்புஎனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின். தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 318