பக்கம்:திருக்குறள் உரை.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 125. நெஞ்சொடு கிளத்தல் 1241.நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கு மருந்து. 1242. காதலவரிலர் ஆகநீ நோவது பேதைமை வாழியென் நெஞ்சு. 1243. இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல் பைதல்நோய் செய்தார்கண் இல். 1244. கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இலையென்னைத் தின்னும் அவர்க்காணல் உற்று. 1245. செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர். 1246. கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய் பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு. 1247. காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேனிவ் விரண்டு. 1248. பரிந்தவர் நல்காரென்றோங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதையென் நெஞ்சு. 1249. உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ யாருழைச் சேறியெண் நெஞ்சு. 1250. துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா இன்னும் இழந்தும் கவின். தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 324